Wednesday, 20 November 2013

பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்..




அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
.
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
.
.
1.
கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
.
2. ‘Run’
என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது சென்னை பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
.
3.
உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
.
4. ‘Find’
பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
.
5.
என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?
.
6.
விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.
.
7. ‘Microsoft office’
உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
.
8. ‘My Network Places’
கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.
.
9.
இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

Wednesday, 13 November 2013

facebook world-fun


இன்னும் கொஞ்ச நாளுல பாருங்க..இந்த மாதிரியெல்லாம் பேப்பர்ல வர போகுது



*
பேஸ்புக் கமெண்ட் எதிரொலி - வாலிபருக்கு வெட்டுகுத்து..

*
லைக் எதுவும் விழாததால் வாலிபர் தற்கொலை..

*
லேப்டாப்பால் அடித்து கிழே தள்ளியதில் காயம் - மாணவர் கைது..

*
கணவன் போட்டோவிற்கு மனைவி லைக் போடாததால் விவாகரத்து..

*
நண்பர் கோரிக்கையை ஏற்க மறுத்தவர் மீது வாள் வீச்சு

*
அனுமதியின்றி அடுத்தவர் பதிவை திருடியவர் மீது உச்ச நீதிமன்றத்தில் பதிப்புரிமை தொடர்பான வழக்கு...

*
தினமும் லைக் போட ஆள் தேவை - ஒரு லைக் ரூ 1

(
நீங்களும் இதுபோல எதாவது யோசிச்சி சொல்லுங்க )


Sunday, 22 September 2013

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!



அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் .

அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் .

அப்பொழுது அந்த பத்திரிகையாளர் அண்ணாவிடம் "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள் " என்று கேட்க அறிஞர் அண்ணாவோ "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் " என்று திருப்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பத்திரிகையாளரோ " இது ஒரு பொதுவுடைமை நாடு .இங்கு யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்கு தான் முன்னுரிமை .அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்தி . அப்படியானால் ஹிந்தி தானே தேசிய மொழி " என்று சொல்லியிருக்கிறார் .

ஆனால் அறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியே பதில் அளித்தாராம் ." நீங்கள் சொல்வது போல பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிகையை விட காக்கைகளின் எண்ணிக்கை தானே அதிகம். காக்கைகள் அதிகம் இருப்பதால் நாம் அதை தேசியப்பறவயாக வைக்கவில்லையே ,மயிலை தானே வைத்து இருக்கிறோம் " என்றாராம்

இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கை தட்டும் ஓசை நிற்க பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!

தன்னம்பிக்கை


ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,
எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்
தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ
என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்.