Sunday, 22 September 2013

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!



அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் .

அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் .

அப்பொழுது அந்த பத்திரிகையாளர் அண்ணாவிடம் "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள் " என்று கேட்க அறிஞர் அண்ணாவோ "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் " என்று திருப்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பத்திரிகையாளரோ " இது ஒரு பொதுவுடைமை நாடு .இங்கு யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்கு தான் முன்னுரிமை .அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்தி . அப்படியானால் ஹிந்தி தானே தேசிய மொழி " என்று சொல்லியிருக்கிறார் .

ஆனால் அறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியே பதில் அளித்தாராம் ." நீங்கள் சொல்வது போல பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிகையை விட காக்கைகளின் எண்ணிக்கை தானே அதிகம். காக்கைகள் அதிகம் இருப்பதால் நாம் அதை தேசியப்பறவயாக வைக்கவில்லையே ,மயிலை தானே வைத்து இருக்கிறோம் " என்றாராம்

இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கை தட்டும் ஓசை நிற்க பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!

தன்னம்பிக்கை


ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,
எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்
தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ
என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்.

Wednesday, 4 September 2013

ராஜா காலத்து facebook

" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

"
என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

"
இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

"
என்னாது போரா..? நாம் தான் அவன் போடும்
எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக்
போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு
வருகிறான்.. "

"
அவர் அந்தபுரத்தில் இருக்கும் 2 ராணிகளுக்கு
நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... "

"
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கெல்லாமா
போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "

Tuesday, 3 September 2013

WHAT A TAMILNADU

# எவனோ ஒருவன்
 
என் பொண்ணுக்கு "சாதி சான்றிதழ்" வாங்குவதற்காக தாலுகா அலுவலகம் சென்றிருந்தேன்.

அங்கிருந்த ஒருவர் என் சாதி குறித்து கேட்க, பொறுமையாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு,

"
எவ்வளவு சார் ஆகும்?" என்று கேட்டேன்.

"100
ரூபாய் தான் சார்" என்றவர்,

"
ஒண்ணு பண்ணுங்க சார் ... உங்க சாதியிலேயே இருக்குற உட்பிரிவுல சான்றிதழ் கொடுக்குறேன் ... அதை வாங்குனீங்கன்னா அரசு இட ஒதுக்கீட்டுல நிறைய சலுகைகள் கிடைக்கும் சார்" என்றார்.

"
அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்" என்று நான் கேட்க,

அவர் சொன்னார்,

"500
ரூபாய் தான் சார் வித்தியாசம்"