Wednesday, 12 June 2013

மனதைத் தொட்ட வரிகள்



  • ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

       
  •  தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
      
       
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.     

  • அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!
    .
       
  •  மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை

       
  •  ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். 
 
  • பொது இடங்களில் நாம் தின்பண்டங்கள் தின்னும்போது அது தவறி விழும் பட்ச்சத்தில் நாம் கெளரவ குறைச்சல் காரணமாக அவற்றை திரும்ப எடுப்பதில்லை அதே நாம் வீட்டில் சாப்பிடும்போது

     
  • மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும்
    பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்


     
  • வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி


     
  • வாழும்போதும் வாழ்ந்து முடித்த பிறகும்...
    சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......
    வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது
     
    • நம்பிக்கை நிறைந்த
      ஒருவர், யாரிடமும்
      மண்டியிடுவதுமில்லை...
      கையேந்துவதுமில்லை....


    நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!
    நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

No comments:

Post a Comment